மோடி VS இந்தியா, ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள் - சூடுபிடிக்கும் அரசியல் களம்!
பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்திய என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்க பல திட்டங்கள் தீட்டி வருகிறது. இதனை முறியடிப்பதற்காக எதிர்கட்சிகள் ஒன்று கூடி வருகின்றனர். காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்தின. இதனையடுத்து பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தினிற்கு பெயர்சூட்டப்படவேண்டும் என்று கூறப்பட்டது. இதில் தேசத்தை முன்னிறுத்தும் விதமாக இந்தியா என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பெயரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance - INDIA) என பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - UPA' என பெயரிடப்பட்டிருந்த நிலையில் அந்த பெயர் தற்போது 'இந்தியா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.