ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. பிரதமர் மோடி கொதிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில், பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக பயங்கரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி மேற்கு வங்கம், அலிபுர்துவார் பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.
மோடி சூளூரை
140 கோடி இந்தியர்கள் சார்பாக இதை அறிவிக்கிறேன். இந்தியாவை ஒரு பயங்கரவாதி தாக்கினால் அதற்காக மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்குள் புகுந்து மூன்று முறை இந்திய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது.
பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் இனப்பெருக்கக் களமாக பாகிஸ்தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.