3 மனைவிகள், 9 குழந்தைகளுக்காக நபர் செய்த செயல் - மிரளவைக்கும் சம்பவம்
குடும்பத்தை பராமரிக்க நபர் ஒருவர் திருடனாக மாறியுள்ளார்.
பெரிய குடும்பம்
கர்நாடகா, பெங்களுருவில் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திருட்டில் ஈடுபட்ட 16 வயதான சிறுவன் மற்றும் பாபாஜான்(36) கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணையில், இருவரும் தந்தை மகன் என்பது தெரியவந்துள்ளது.
திருடனாக மாறிய நபர்
மேலும், பாபாஜானுக்கு மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் உள்ளனர். இந்த குடும்பத்தை சமாளிக்க முடியாமல், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நோக்கில் தொழில்முறை திருடனாக மாறியுள்ளார்.
தற்போது அவர்களிடம் இருந்து 23 சவரன் தங்க நகைகள், அரை கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக 7 இடங்களில் திருடியுள்ளார். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.