ஆன்லைன் ரம்மி விளையாட்டு: நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக் குறித்து போடப்பட்ட வழக்கில் நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்லைன் விளையாட்டான ரம்மிக்கு பலர் அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து பாலி வடக்கன் என்பவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அவர் தெரிவித்திருந்தாவது,‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இது சூதாட்டம் ஆகும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த விளையாட்டுக்கு தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடும்படி தூண்டுகின்றனர்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர்களான நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட உள்ளனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.