பெண்களை ஆடையின்றி பார்க்கும் ஆசையில் மாயக்கண்ணாடி வாங்கிய முதியவர் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

Mirror Uttar Pradesh Prison
By Vinothini Aug 18, 2023 05:39 AM GMT
Report

முதியவர் ஒருவர் பெண்களை ஆடையில்லாமல் பார்பதற்காக மாயக்கண்ணாடி வாங்கி கடைசியில் அவருக்கு நேர்ந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாயக்கண்ணாடி

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ் குமார் சுக்லா, 72 வயதான இவருக்கு இளம் பெண்கள் மீது ஆர்வம் அதிகம். இதனை அறிந்த நபர்கள் அவரை ஏமாற்றி பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டனர்.

old-man-bought-magic-mirror-to-see-women-naked

அதனால் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல பழங்கால பொருட்களை சேமிக்கும் நிறுவனத்துடைய ஊழியர்கள் என்று கூறி அவர்கள் முதியவரை அணுகியுள்ளனர். அவரிடம் தங்களிடம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பயன்படுத்தும் மாயக்கண்ணாடி உள்ளது என்று கூறி அவரை நம்ப வைத்தனர்.

மேலும், கண்ணாடி மூலமாக பெண்களை நிர்வாணமாக பார்க்க முடியும் என்றும், எதிர்காலத்தையும் கணிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஏமாற்றிய கும்பல்

இந்நிலையில், மாயக்கண்ணாடியின் விலை ரூ. 2 கோடி வரை என்றும், கூட்டாக பணத்தை பங்கிட்டு அந்த கண்ணாடியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முதியவரிடம் கூறினர். அவரும் இதனை நம்பி தனது பங்காக ரூ. 9 லட்சம் வரை கொடுத்து வாங்கியுள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இது மோசடி என்பதை உணர்ந்த சுக்லா, தனது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளார்.

old-man-bought-magic-mirror-to-see-women-naked

ஆனால் அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனை அந்த முதியவர் போலீசிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அவினாஷ் குமார் சுக்லாவை மிரட்டியது மேற்கு வங்கத்தை சேர்ந்த பார்த்தா சிங்காராய், மோலயா சர்க்கார், சுதிப்தா சின்ஹாராய் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அவர்கள் பலரிடம் கைவரிசையை காட்டியது தெரியவந்தது, இதனால் போலீசார் அவர்களை கைது செய்து 5 செல்போன், கார், ரூ. 28 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றின.