ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் இன்று இரவு டெல்லி பயணம் - பரபரப்பில் அதிமுக

O. Panneerselvam
By Nandhini Jun 23, 2022 01:00 PM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.

ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்

அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் இன்று இரவு டெல்லி பயணம் - பரபரப்பில் அதிமுக | O Panneerselvam Delhi

ஓ.பி.எஸ். வெளிநடப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி பயணம்

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன் உட்பட 5 பேர் இன்று இரவு டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.