தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

ADMK O. Panneerselvam
By Nandhini Jun 16, 2022 08:43 AM GMT
Report

சமீபத்தில் அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது.

கூட்டம்

இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் வெளியேறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம் | O Panneerselvam Admk Tamilnadu

ஒற்றை தலைமை கோஷம்

வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒரே தலைமை கோஷம் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாஜக, பாமக ஆகியவை தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கம் எழுப்பினர்.

இதில் ஒரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒற்றை தலைமை முழக்கம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து, ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆங்காங்கு போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன.

ஓ.பன்னீர்செல்வம் - செய்தியாளர்கள் சந்திப்பு 

இந்நிலையில், செய்தியாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் ஒற்றை தலைமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்று பதிலளித்தார். 

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம் | O Panneerselvam Admk Tamilnadu