இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான் - சி.வி.சண்முகம் ஆவேசம்

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 24, 2022 07:47 AM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.

ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்

அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையம் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்தார். அப்போது, ஓ.பி.எஸ். மேடையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது.

இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான் - சி.வி.சண்முகம் ஆவேசம் | O Panneerselvam Admk C V Shanmugam

சி.வி.சண்முகம்

பரபரப்பான சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது, இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அதிமுகவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான்

இந்நிலையில், ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் இனி ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான், இபிஎஸ் தலைமை நிலைய செயலாளராக இருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.