கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வந்த மருத்துவர்; போராடிய நர்ஸ்..பிறப்புறுப்பு துண்டிப்பு!

Sexual harassment India Bihar
By Swetha Sep 13, 2024 07:09 AM GMT
Report

நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு கடந்த வாரம் மருத்துவமனைநிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது தோழர்கள் இருவரும் சேர்ந்து,

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வந்த மருத்துவர்; போராடிய நர்ஸ்..பிறப்புறுப்பு துண்டிப்பு! | Nurse Cut Off Mans Genital Who Tried To Rape

குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்!

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்!

போராடிய நர்ஸ்..

அதன்பிறகு, மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வந்த மருத்துவர்; போராடிய நர்ஸ்..பிறப்புறுப்பு துண்டிப்பு! | Nurse Cut Off Mans Genital Who Tried To Rape

இந்த நிலையில், நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் அணைத்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றபட்டுள்ளது.