பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்!

Sexual harassment Pakistan Crime World
By Swetha Aug 17, 2024 07:37 AM GMT
Report

வெளிநாட்டு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

சாலையில் பெண்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் சாலையோரத்தில் ஒரு இளம்பெண் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான காட்சிகள் தொலைகாட்சியிலும் வெளியானது.

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்! | Belgium Women Got Gang Raped In Pakistan By 5 Mens

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

பாலியல் வன்கொடுமை

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்பெண்ணிற்கு 28 வயது ஆகிறது. சமீபத்தில்தான் அவர் பாகிஸ்தான் வந்தார். அப்போது ஒரு 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 5 நாட்கள் அடைத்து வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் போலீசில் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்! | Belgium Women Got Gang Raped In Pakistan By 5 Mens

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் அளித்த தகவலை வைத்து தமீசுதீன் என்பவரை விசாரித்து வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் நேற்றுதான் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டநிலையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.