பெண் நோயாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நர்ஸ் - உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!
நோயாளியுடன் நர்ஸ் ஒருவர் பாலுறுவு கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நோயாளியுடன் நெருக்கம்
பிரிட்டன், வேல்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றில் பெனலோப் வில்லியம்ஸ்(42) என்ற நர்ஸ் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், மருத்துவமனையின் பின்புறமுள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில்,
நோயாளி ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில், நோயாளி காரில் இருந்தபடி அவசரமாக அழைப்பு விடுத்ததால் அங்கு சென்றதாகவும், பின்சீட்டில் அமர்ந்தபடி அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பணிநீக்கம்
ஆனால், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நோயாளியுடன் நர்ஸ் பெனலோப் சுமார் ஒரு வருட காலமாக நெருக்கமான உறவில் இருந்ததாகவும், இது தொடர்பாக சக பணியாளர்கள் அவரை பலமுறை எச்சரித்ததும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று, காரின் பின் இருக்கையில் வைத்து நோயாளியுடன் நர்ஸ் உடலுறவில் ஈடுபட்டபோது நோயாளி மாரடைப்புக்கு ஆளாகி இருக்கிறார். மேலும், ஆம்புலன்ஸ் அழைக்காமல் சக பணியாளரை உதவி கோரியுள்ளார்.
தனக்கு பிரச்சினை ஏற்படாது தப்பிப்பதில் கவனமாக இருந்துள்ளார். இதனால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, நர்ஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.