தையல் போட ஸ்டாப்ளேர்பின் அடித்த நர்ஸ்... அரசு மருத்துவமனை அலட்சியம்!
ஏற்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையலுக்கு பதிலாக ஸ்டாப்லர்பின் அடித்த சம்பவம் அதிஎச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருவர் கையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் குமாரசெல்வம் பணியில் இல்லாதபோது,
அப்போது செவிலியர் அடிபட்ட இடத்திற்கு தையலுக்கு பதிலாக ஸ்டாப்ளேர்ப்பின் அடித்துவைத்து அனுப்பியுள்ளார். செவிலியர் மறுநாள் வந்து தையல் போட்டுக்குள்ளுமாறு கூறியுள்ளார்.
செவிலியர் மருத்துவம்
எனவே மறுமுறை அந்த நோயாளி மீண்டும் மருத்துவமனை சென்றுள்ளார். அதற்கு மருத்துவர் குமார செல்வம் நான் அப்போது பணியில் இல்லை எனவும், அது செவிலியர் பார்த்த மருத்துவம் எனவும் கூறியுள்ளனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் இப்பொழுது அந்த ஸ்டாப்ளேர்ப்பின்னை மாற்ற முடியாது என கூறி மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.இந்த நிலையில் தையலுக்கு பதிலாக
நோயாளிக்கு ஸ்டாப்ளேர்ப்பின் அடித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏஎற்படுத்தி வருகிறது.