நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் வர இது தான் காரணம் - சீமான்!
தமிழ் புதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் என ஒரு ஓட்டுக்கு திமுக அரசு 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். '
திமுக அரசு
மாலை முரசு' நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி இன்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் உள்ள திருவுருவப்படத்திற்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செழித்தியாளர்களை சந்தித்த அவர்,"நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள 36 லட்சம் வாக்குகளில் சுமார் 20 லட்சம் வாக்குகள் திமுக ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ளது.அப்பா திமுகவில் இருந்தால், பிள்ளை பேரன் எல்லாம் எங்களுடைய கட்சியில் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்ததார்.
சீமான்
மேலும் நாம் தமிழர் கட்சிக்கு புதிய தலைமுறை, குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்கிறார்கள்.இதனால், தான் திமுக, இந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை ஈர்க்கும் முயற்சியில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், தமிழ் புதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் என ஒரு ஓட்டுக்கு திமுக அரசு 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,''விஜய் நடத்த உள்ள மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்ட தாக சீமான் தெரிவித்தார்.