இலங்கை மக்களின் மன உணர்வு - குஷ்புக்கு பதில் இடம்பிடித்த டிடி!
NORTHERN UNI-யின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21ல் யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.
குஷ்புக்கு பதில் டிடி
இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குவதாய் இருந்தது. ஆனால் குஷ்பு, விடுதலை புலிகளுக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்ததால் மக்களின் மன உணர்வை புரிந்துக்கொண்டு உடனே, அந்த நிகழ்ச்சியில் இருந்து குஷ்புவை NORTHERN UNI நீக்கியுள்ளது.
தற்போது குஷ்புக்கு பதிலாக தொகுப்பாளர் டிடி, அந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய டிடி, "இலங்கை மக்கள் மிகவும் அன்பாக இருப்பார்கள்.
இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் முதன் முறையாக இலங்கை வர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
https://www.youtube.com/shorts/6-pt0SyLIfU

இலங்கையில் தேனிலவு கொண்டாட விரும்பிய கணவருக்கு இறுதியில் நடந்த துயரம் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் IBC Tamil
