கர்ப்பிணிகள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இங்கு மரண தண்டனை - அதிர்ச்சி தகவல்
வடகொரியாவில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்
வடகொரியா சர்வாதிகார ஆட்சியின் கீழ் தத்தளித்து வருகிறது. இங்கு அதிபரான கிம் ஜாங் உன் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது. அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை,
மரண தண்டனை?
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராணுவ வீரர்களிடம் இருந்து 600 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போனதால் , அந்த துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கினை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.