செலவுக்கு பணம் தராதாதால் ஆத்திரம்; சொந்த மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி!

Tamil nadu Thoothukudi Crime Death
By Swetha Mar 13, 2024 06:13 AM GMT
Report

பணம் கொடுக்க மறுத்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சாம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், வீரகுமாரபிள்ளை தெருவில் செல்லையா(58) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான வேதநாயக துரை (35) என்பவருக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.

செலவுக்கு பணம் தராதாதால் ஆத்திரம்; சொந்த மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி! | Non Payment Of Expenses Son Slits Fathers Throat

இந்நிலையில், வழக்கம் போல் கோவிலில் செல்லையா தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். 

50 ஆண்டுகளாக "coco cola" குடித்து மட்டுமே வாழும் நபர் - மிரண்டுபோன மருத்துவர்கள்!

50 ஆண்டுகளாக "coco cola" குடித்து மட்டுமே வாழும் நபர் - மிரண்டுபோன மருத்துவர்கள்!


இதனால், செல்லையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மறுநாள் அவ்வழியாக சென்ற ஊர்மக்கள் செல்லையா கொலை செய்யப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கொடூரச்செயல் 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்லையாவை அவரது மகனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

செலவுக்கு பணம் தராதாதால் ஆத்திரம்; சொந்த மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி! | Non Payment Of Expenses Son Slits Fathers Throat

சமீபத்தில் செல்லையாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மகன் வேதநாயக துரை அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அவர் செல்லையாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். 

செலவுக்கு பணம் தராதாதால் ஆத்திரம்; சொந்த மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி! | Non Payment Of Expenses Son Slits Fathers Throat

ஆனால் அவர் குடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வேதநாயகதுரை, தனது தந்தை செல்லையாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வேதநாயகதுரை மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.