புதுவை சிறுமி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி - பரபரப்பு தகவல்!

Sexual harassment Puducherry Death
By Swetha Mar 11, 2024 05:43 AM GMT
Report

9 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.

புதுவை சிறுமி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி - பரபரப்பு தகவல்! | Puducherry Girl Murder Case Accust Commits Suicide

ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அதன்பின் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பின், போலீஸார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடினர்.

அப்போது, அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் அதில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். உடனே, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ!

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ!

இதற்கிடையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் வெடித்த நிலையில், சிறுமியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். 

தற்கொலை முயற்சி

இந்த வழக்கு தொடர்பாக விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் காலாப்பட்டு சிறையில் 14 நாட்களுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

புதுவை சிறுமி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி - பரபரப்பு தகவல்! | Puducherry Girl Murder Case Accust Commits Suicide

இந்நிலையில், விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை கழுத்தில் சுற்றி நெரித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை பார்த்த கருணாஸ் சத்தம் போட்டதால் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார்.

புதுவை சிறுமி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி - பரபரப்பு தகவல்! | Puducherry Girl Murder Case Accust Commits Suicide

இதையடுத்து, போலீசார் அவரை இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்ததுடன், இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.