17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கர்நாடக முன்னாள் பாஜக முதல்வருக்கு பிடிவாரண்ட் !!

BJP Karnataka India B. S. Yediyurappa
By Karthick Jun 13, 2024 11:48 AM GMT
Report

வழக்கு

கல்விக்காக உதவி கேட்டு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தாயாருடன் எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளார் மைனர் பெண் ஒருவர். அப்போது எடியூரப்பா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BS Yediyurappa

இது தேர்தலுக்கு முன்பே கர்நாடக அரசியலில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், பிரஜ்வல் கேஸ் வெளியே வந்ததால் இது மீடியா கண்களில் இருந்து சற்று மறைந்தது.

எல்லை மீறிய எடியூரப்பா? தனிஅறையில் என்ன நடந்தது - அவரே கொடுத்த விளக்கம்!

எல்லை மீறிய எடியூரப்பா? தனிஅறையில் என்ன நடந்தது - அவரே கொடுத்த விளக்கம்!

ஆனால், வழக்கு நடைபெற்றே வந்தது. பிடிவாரண்ட் இந்நிலையில் தான் இன்று பெங்களூரு நீதிமன்றம் பெயில் வாங்க முடியாத பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. எடியூரப்பா மீது போக்சோ மற்றும் section 354 A (sexual harrassment) வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

பிடிவாரண்ட் 

இந்த வழக்கில் திடுக்கிடும் நகர்வாக, புகார் அளித்த சிறுமியின் 54 வயதான தாயார் கடந்த மாதம் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணமாக lung cancer கூறப்பட்டது.

BS Yediyurappa

81 வயதாகும் எடியூரப்பா தன் மீதான புகார்களை மறுத்து, சட்டப்படி இந்த வழக்குகளை சந்திப்பதாக தெரிவித்தார். முன்னதாக, கர்நாடக home minister பரமேஸ்வரா செய்தியாளர்களை சந்தித்த போது, வழக்கு CID விசாரணையில் இருப்பதாக கூறி, அவர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்றார்.