இனி மினிமம் பேலன்ஸ் தொல்லை இல்லை - வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வங்கி
கனரா வங்கியில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.
இது வங்கிகளுக்கு ஏற்ப ரூ.500, ரூ.1000 முதல் ரூ.5000, ரூ.10,000 மாறுபடும். இந்நிலையில், கனரா வங்கி, தங்களது வங்கியில் சேமிப்புக் கணக்குகள் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டியதில்லை என அறிவித்துள்ளது.
புதிய விதி
சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதமும் ரத்து செய்யப்படும். இந்த புதிய அறிவிப்பு வழக்கமான சேமிப்பு கணக்குகள், சம்பளம் பெறுவோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் பொருந்தும்.
அவசர கால தேவைகளுக்கு அந்தத் தொகையை பயன்படுத்த முடியவில்லையே என பலரும் கவலைப்பட்டு வந்த நிலையில் கனரா வங்கியின் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.