நோ பார்க்கிங் பகுதியில் செல்லக்கூடாது.. செக்யூரிட்டி மீது சராமாரி தாக்குதல் - பதைபதைக்கும் விடியோ!

Chennai Viral Video Chengalpattu
By Vidhya Senthil Oct 22, 2024 05:26 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 பொதுவாகச் சாலை விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும்.

 தாக்குதல் 

நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது எனத் தடுத்து நிறுத்திய (செக்யூரிட்டி) காவலாளியைப் பெண் உட்பட 4 பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 crimne

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை காவலாளி (செக்யூரிட்டி) ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார்.ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா..நடுரோட்டில் போலீசாரை கேலி செய்த ஜோடி!

உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா..நடுரோட்டில் போலீசாரை கேலி செய்த ஜோடி!

அப்போது காவலாளி (செக்யூரிட்டி) காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த காரில் இறங்கிய பெண் ஒருவர் வேகமாகக்  காவலாளி (செக்யூரிட்டி) கன்னத்தில் அறைந்தார். இதனைக் கண்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் காரில் இருந்த இறங்கி காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வீடியோ காட்சிகள்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்கள் எழுந்தனர். மேலும் இந்த வீடியோ காட்சிகளை வைத்து,2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேர் மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

 Security Attack

  தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.  மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் வெளியாகும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.