நித்யானந்தா இடத்தை பிடிக்க ஸ்கெட்ச்.. திட்டமிட்டு காய் நகர்த்தும் ரஞ்சிதா - கைலாசாவின் நிலை?
நடிகை ரஞ்சிதா நித்யானந்தா இடத்தை பிடிப்பதற்காக திட்டமிடுவதாக சீடர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கைலாசா
இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பி சென்று தன்னிடம் உள்ள பணத்தை வைத்து திவு ஒன்றை வாங்கினார். அதற்கு கைலாசா துன்று பெயர் வைத்து தனக்கென ஒரு நாட்டை அமைத்துக்கொண்டார்.
அந்த நாட்டிற்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் மற்றும் கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என தனித்தனி பெண் சீடர்களையும் அமைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா அறிவித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியானது.
ரஞ்சிதா
இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கைலாசா கிளைகளின் நிர்வாகத்திலும் ரஞ்சிதா தீவிரம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின. நித்யானந்தாவை போல ரஞ்சிதாவும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதனால் கைலாசவில் நித்யானந்தாவுக்கு அடுத்த இடத்தை பிடிப்பதற்காக ரஞ்சிதா காய் நகர்த்துகிறார் என்ற தகவல் வெளியாகியது.
இதனால் கைலாசாவில் உள்ள சீடர்கள் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நித்யானதாவின் சீடர்கள் பணிவிடை செய்தவர் கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு எப்படி வரலாம், அவர் எங்களை போன்று கஷ்டப்பட்டாரா? அவர் பிரதமரா? கூறியுள்ளனர்.
தனக்கு எதிராக திரும்புவதை அறிந்த ரஞ்சிதா தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.