பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு? 20 இடங்களில் என்ஐஏ திடீர் ரெய்டு - பரபரப்பு!

Chennai Mayiladuthurai
By Sumathi Jan 28, 2025 04:53 AM GMT
Report

தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

என்.ஐ.ஏ. சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஐந்து இடங்கள் மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

seerkazhi

திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஃபாசித் மற்றும் எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இனி பெட்ரோல் போடவும் இன்சூரன்ஸ் கட்டாயம் - அரசின் புதிய திட்டம்

இனி பெட்ரோல் போடவும் இன்சூரன்ஸ் கட்டாயம் - அரசின் புதிய திட்டம்

என்ன காரணம்?

ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தெரிகிறது.

NIA Raid

முன்னதாக பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.