நிம்மதியாக இல்லை.. அப்பாவிடமே செல்கிறேன்.. புதுமணப்பெண் தற்கொலை - சிக்கிய கடிதம்!

Tamil nadu Death Vellore
By Jiyath Feb 25, 2024 12:28 PM GMT
Report

திருமணமான 6-வது மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தற்கொலை 

வேலூர் மாவட்டம் கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (26). இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி (22) என்ற பெண்ணை கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

நிம்மதியாக இல்லை.. அப்பாவிடமே செல்கிறேன்.. புதுமணப்பெண் தற்கொலை - சிக்கிய கடிதம்! | Newlywed Girl Hangs Herself 6 Months Of Marriage

இதற்கிடையில் தமிழரசன் ஏற்கனவே மாமன் மகளைத் திருமணம் செய்து கொண்டதும், அதனை மறைத்து 2-வதாக தன்னை திருமணம் செய்ததும் மீனாட்சிக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தமிழரசன் மற்றும் மாமனார்- மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மீனாட்சி கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; டி.வி ஆங்கரை கடத்தி டார்ச்சர் - பெண் தொழிலதிபர் கைது!

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; டி.வி ஆங்கரை கடத்தி டார்ச்சர் - பெண் தொழிலதிபர் கைது!

போலீசார் விசாரணை 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் போலீசார், மீனாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிம்மதியாக இல்லை.. அப்பாவிடமே செல்கிறேன்.. புதுமணப்பெண் தற்கொலை - சிக்கிய கடிதம்! | Newlywed Girl Hangs Herself 6 Months Of Marriage

இதனையடுத்து மீனாட்சி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கடிதத்தில், "நான் ஏற்கனவே தமிழரசனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கூறினேன். மாமா என் பேச்சைக் கேட்காமல் என்னை அவருடன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்.

நான் நிம்மதியாக இல்லை. என் அப்பாவிடமே சென்று விடுகிறேன். என் கணவர் தமிழரசனை ஒன்றும் செய்து விடாதீர்கள் நான்தான் நிம்மதியாக இல்லை. அவராவது நிம்மதியாக இருக்கட்டும். நான் சாகப் போகிறேன்" என்று மீனாட்சி குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.