நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இனி தாமரை அச்சிடப்பட்ட சீருடை - காங்கிரஸ் எதிர்ப்பு!
பாராளுமன்ற ஊழியர்களுக்கு தாமரை அச்சிடப்பட்ட சீருடையாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய உடை
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ம் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கவுள்ளது. அங்கு புதிய கட்டிடத்திற்கு மாறும்பொழுது அங்காள பணிபுரியம் ஊழியர்களுக்கு புதிய சீருடை மாறுகிறது.
இதனை தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் டிசைன் செய்துள்ளது. அதில் ஆண் ஊழியர்களுக்கு 'நேரு ஜாக்கெட்' போன்ற இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த சட்டையில், ஏராளமான 'தாமரை' படங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னர், சபை காவலர்களுக்கு இந்த சீருடையுடன் மணிப்பூர் தலைப்பாகையும் உண்டு. இதுபோல், பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்நிலையில், அந்த தாமரை மலர் சின்னம் நமது நாட்டின் தேசிய சின்னம், ஆனால் பா.ஜ.க கட்சியினரின் சினமும் அதுதான், அதனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காங்கிரஸ் தரப்பில், மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் கூறுவது, "நாடாளுமன்றம், அனைத்து கட்சிகளுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் அதை கட்சி சொத்தாக பா.ஜனதா மாற்றுகிறது.
நாடாளுமன்ற ஊழியர்கள் சீருடையில், தேசிய விலங்கு என்பதற்காக 'புலி' படத்தை ஏன் போடவில்லை? தேசிய பறவை என்பதற்காக 'மயில்' படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜனதாவின் சின்னம் அல்ல. எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள்?. இந்த வீழ்ச்சியை சபாநாயகர் கவனிக்க வேண்டும்" என்று இதனை எதிர்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.