ராணி எலிசபெத் மறைவு - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம்...!

Queen Elizabeth II Death
By Nandhini Sep 09, 2022 01:46 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ராணி எலிசபெத் மறைவையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு

இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தொடங்கியது 'ஆபரேஷன் யூனிகார்ன்'

இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் யூனிகார்ன்என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். நேற்று இறந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது.

ராணி மறைவுக்கு எம்.பி.க்கள் இரங்கல்

இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசி வருகின்றனர்.

Queen Elizabeth II - death

Queen Elizabeth II - death

Queen Elizabeth II - death