இனி குன்னுர் போக வேண்டாம்!! ஊட்டிக்கு நேரா போக புதிய புறவழிச்சாலை ரெடி
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது ஊட்டி.
ஊட்டி
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் மிக பெரிய சுற்றுலா தளம் என்றால் அது ஊட்டி தான். இந்தியா முழுவதிலும் இருந்து கோடை காலத்தில் இங்கு வந்து குவியும் மக்கள் ஏறலாம். அப்படி அதிகளவில் மக்கள் படையெடுக்கும் நிலையில், எப்போதும் ஊட்டி மலை பாதை போக்குவரத்து நெரிசல் கொண்ட இடமாகவே இருந்து வருகிறது.
இதனை சரிசெய்ய கோரி பல முறை கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. குறிப்பாக, மழை சீசனில் ஊட்டி தலைகுந்தா பகுதி, கால்ப் பிளப் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு அரசு இயக்கும் பஸ்சில் தான் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் பெரும் நேர விரயம் மட்டுமின்றி, பயண நேரம் வீணாவதாக பலரும் புலம்புகிறார்கள்.
புதிய சாலை
போக்குவரத்து நெரிசலும் சாலைகளில் அதிகரித்து விடுகின்றன. பிரச்சனையை உணர்ந்த மாநில நெடுஞ்சாலைத்துறை சுமார் 40 கோடி மதிப்பீட்டில் புதிய பாதை அமைக்கும் திட்டத்தை துவங்கியது.
அதன்படி, 20.5 கி.மீ. கொண்ட இந்த புறவழிச்சாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ், கேத்தி பாலாடா, கொல்லிமலை வழியாக ஊட்டிக்கு சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், குன்னுர் செல்லாமலே நேராக ஊட்டி சென்றடைய முடியும்.
இதனால பெரும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். பணிகள் தற்போது சுமார் 80% முடிவடைந்து விட்ட நிலையில், இந்த ஆண்டின் 2-ஆம் சீசனுக்குள் பணிகள் முழுவதுமாக முடித்து போக்குவரத்துக்கு திறக்கும் முனைப்பில் நெடுஞ்சாலைத்துறை இருப்பதாக தெரிகிறது.