எங்க கதையை படமாக்கிட்டு எங்கள ஏமாத்திட்டாங்க - “ஜெய்பீம்” படத்தின் புதிய சர்ச்சை..!

Suriya Tamil Nadu Police TJ Gnanavel
By Thahir Jun 13, 2022 07:16 AM GMT
Report

ஜெய்பீம் திரைப்படத்தின் நிஜ வாழ்க்கை கதாநாயகர் ஒருவர் தங்களின் உண்மை கதை திரைப்படமாக எடுத்துவிட்டு எங்களை திரைப்படக்குழு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.

ஜெய்பீம் திரைப்படம்

இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி வெளியானது.

ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் சந்திக்கும் கஷ்டங்கள் அவர்களின் விடை தெரியா வாழ்க்கையை கதையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம்.

எங்க கதையை படமாக்கிட்டு எங்கள ஏமாத்திட்டாங்க - “ஜெய்பீம்” படத்தின்  புதிய சர்ச்சை..! | New Controversy Over Jaybeam Movie

முன்னாள் நீதிபதி சந்துருவை மையமாக கொண்டு திரைப்படமாக உருவான இப்படத்தை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வந்தனர்.

திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களுக்கும் இப்படத்தை பாராட்டினர். ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலக பிரபலங்களும் ஜெய்பீம் பற்றி சமூக வலைதளங்களில் பெருமையாக பதிவுகளை பதிவு செய்து டிரெண்ட் செய்தனர்.

ஏமாற்றிய படக்குழு

இந்த நிலையில் ஜெய்பீம் திரைக்கதையின் உண்மை காதாநயகர்களான ராஜக்கண்ணு, ஆச்சி, கொளஞ்சியப்பன் ஆகிய மூவரையும்,

போலீசார் திரைப்படத்தில வருவது போன்று ஆபாச வார்த்தைகளை கூறி போலீசார் சித்தரவதை செய்தனர் என நிஜ கதாநாயகர் கெளாஞ்சியப்பன் தெரிவித்தார்.

எங்க கதையை படமாக்கிட்டு எங்கள ஏமாத்திட்டாங்க - “ஜெய்பீம்” படத்தின்  புதிய சர்ச்சை..! | New Controversy Over Jaybeam Movie

இந்த கதையை தன்னிடம் இயக்குநர் த. செ. ஞானவேல் கேட்டு எழுதினார்.ஆனால் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

தங்களுக்கு படிப்பறிவு இல்லை,அனாதையாக நிற்கிறோம் என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

அறிவு சொத்து திருட்டு 

இச்சம்பவம் பற்றி கொளஞ்சியப்பன் வழக்கறிஞர் பேசுகையில், இயக்குநர் த. செ. ஞானவேல் கொளஞ்சியப்பனை சந்தித்து இந்த சம்பவத்தை சினிமாவாக எடுக்க உள்ளதாகவும்,நீங்கள் உண்மையா என்ன நடந்தது என்பதை கூறுங்கள் என்றார்.

மேலும் அவர்,இந்த கதைக்கான உரிமைக்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறோம்.அது இல்லாமல் படத்தின் வருவாயில் 20 சதவீதம் கொடுப்பதாகவும் கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எங்க கதையை படமாக்கிட்டு எங்கள ஏமாத்திட்டாங்க - “ஜெய்பீம்” படத்தின்  புதிய சர்ச்சை..! | New Controversy Over Jaybeam Movie

கொளஞ்சியப்பன் நடந்த சம்பவங்களை நோட்டில் எழுதி வைத்ததை எல்லாம் இயக்குநர் வாங்கி சென்றுள்ளார் என்றார். அதன் பின் கொளஞ்சியப்பனை வந்து பார்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திரைப்படம் வந்த பிறகு உண்மை கதாநாயகர்கள் படத்தின் கதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். காப்பி ரைட் சட்டத்தின் படி கதைக்கான உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமான கடிதத்தை வாங்கி விட்டு தான் படம் பண்ண முடியும்.

இவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பத்தை எடுக்க இவர்களிடம் எந்த அனுமதி கடிதமும் வாங்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.

எங்கள் கதைக்காண உரிமைத்தொகை,ஒரு பட்டியலினத்தின் அறிவு சொத்தை யாரும் திருடி பணம் சம்பாதிப்பதற்கு அனுமதிக்க முடியாது.அவுங்க மேலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

திரைப்படம் வெளியாகி 6 மாதங்களுக்கு மேலாகியும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? - விக்னேஷ் சிவன் சொன்ன முக்கிய தகவல் ..!