ஜெய்பீம் படமல்ல பாடம்,விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை - நடிகர் சூரி
த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் கடந்த திங்கட்கிழமை வெளியானது.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் சந்திக்கும் கஷ்டங்கள் அவர்களின் விடை தெரியா வாழ்க்கையை கதையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம்.
முன்னாள் நீதிபதி சந்துருவை மையமாக கொண்டு திரைப்படமாக உருவான இப்படத்தை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களுக்கும் இப்படத்தை பாராட்டிவருகின்றனர். ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலக பிரபலங்களும் ஜெய்பீம் பற்றி சமூக வலைதளங்களில் பெருமையாக பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர்சூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.
படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim pic.twitter.com/9nAGJGCOje
— Actor Soori (@sooriofficial) November 3, 2021