அப்படி சொல்லியிருக்கக்கூடாது; பகிரங்க மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் - என்ன நடக்கிறது?
பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
சர்ச்சை கருத்து
கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது.
மேலும், தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை ஏன் நெதன்யாகு தலைமையிலான பாதுகாப்பு படை தடுக்க தவறியது என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உங்கள் தவறை ஒப்புக்கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு போருக்குப் பிறகு இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அப்போது நான் உட்பட அனைவரும் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில்,
தற்போது, "நான் தவறு செய்துவிட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயங்களைச் சொல்லி இருக்கக்கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நமது பாதுகாப்புக்காக போரில் முன் களத்தில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்களுக்கும் எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.