இங்கு போரில் தீவிரமாக இஸ்ரேல் பிரதமர் - ஆனால் அங்கு பீச்சில் பொழுதைக் கழிக்கும் மகன்!
இஸ்ரேல் பிரதமரின் மகன் யாயிர் எங்கே என்ற கேள்விதான் தற்போது வைரலாகி வருகிறது.
ஹமாஸ்-இஸ்ரேல் போர்
கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து, இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து வருகிறது. இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை உள்ளது. இதில் பணியாற்றி விடைபெற்ற பலரும் தற்போது போருக்காக நாடு திரும்பி ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
மகனின் வைரல் ஃபோட்டோ
இந்த சமயத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர் இஸ்ரேலில் அதில் இல்லை என தெரியவந்துள்ளது. அவர், அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் பொழுதைக் கழித்துவருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
முன்னதாக யாயிர் சமீபத்தில் மியாமி கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
நெதன்யாகுவின் மூன்றாவது மனைவி சாராவுக்கு பிறந்தவர் யாயிர்(33). அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்ற அவர், போர் சூழலிலும் நாடு திரும்பாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.