மன்றாடிய ஐ.நா; போரை நிறுத்த மறுத்த இஸ்ரேல் - ஒழிக்கும் வரை விடமாட்டோம்!
இஸ்ரேல் போரை நிறுத்த மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 3 வாரங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் இருதரப்பு பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. அதில் பேசிய இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா,
ஐ.நா வலியுறுத்தல்
அமைதி ஏற்படவும், நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு, இருதரப்பும் போரை நிறுத்த முன்வர வேண்டியது அவசியம் என இந்தியா வலியுறுத்துகிறது.
காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஐ.நா.வின் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. மேலும் ஹமாசை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளது.