கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தை தலையை துண்டித்த ஹமாஸ் - பகீர் தகவல்!
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து ஹமாஸ் தீவிரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கொடூர தாக்குதல்
18வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகம் என பல அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தகவல்
தொடர்ந்து, வடக்கு காசாவிலுள்ள மக்களை வெளியேறி தெற்கு காசாவில் குடியேறுமாறு எச்சரித்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து,
— Israel Defense Forces (@IDF) October 23, 2023
பிறக்காத குழந்தையின் தலையை துண்டித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ட்விட்டர் வழிகாட்டுதலின் படி அந்த புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.