நேதாஜியின் பேரன் பாஜகவில் இருந்து விலகல்; எந்த வகையிலும் உதவல - இதுதான் காரணம்!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன், சந்திரகுமார் போஸ் பாஜகவிலிருந்து விலகினார்.
சந்திரகுமார் போஸ்
மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவராக 2016 முதல் 2020 வரை நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில், தற்போது இவர் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
பாஜகவில் விலகல்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாஜகவில் இணைந்து செயல்பட்டேன், ஆனால் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையின்படி மதம், சாதி, கோட்பாடுகளைக் கடந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் அவசியம். ஆனால் தனது இலக்கை எட்ட பாஜக எந்த வகையிலும் உதவவில்லை.
மாநில மக்களை இணைக்கும் வங்காள வியூகத்தை பாஜகவிடம் பரிந்துரைத்தேன். ஆனால், தனது பரிந்துரை நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.