நம்பவைத்து சீரழித்த மந்திரவாதி - கணவருடன் சேரத்துடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Attempted Murder Crime Tirunelveli
By Sumathi Jun 18, 2025 05:37 AM GMT
Report

மாந்திரீகம் செய்வதாக ஏமாற்றி, பெண்னை கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏமாற்றிய மந்திரவாதி

நெல்லை, மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் திருமணமான இரண்டு ஆண்டில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த கயல்விழி திடீரென மாயமானார்.

கயல்விழி

இதுதொடர்பாக புகாரளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை தீவிரமாக ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி, கொட்டாரத்தைச் சேர்ந்த சாமியார் சிவசாமி என்பவரை கயல்விழி அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.

உடனே அவரைப் பிடித்து விசாரித்ததில், கணவரை பிரிந்து வாழ்ந்த கயல்விழி மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும்படி சாமியார் சிவசாமியை அணுகியுள்ளார். அதற்கு மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கூறிசிவசாமி அதிகளவு பணம் பெற்றுள்ளார். ஆனாலும் கணவர் சேர்ந்து வாழ மறுத்ததால், கயல்விழி சாமியாரிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

வாயில் மண்ணை போட்டு.. 80 வயது மூதாட்டிக்கு கொடூரம் - இளைஞர் சுட்டுப்பிடிப்பு

வாயில் மண்ணை போட்டு.. 80 வயது மூதாட்டிக்கு கொடூரம் - இளைஞர் சுட்டுப்பிடிப்பு

பெண் கொலை

இந்த தொல்லை தாங்கமுடியாமல் கயல்விழியை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை சுசீந்திரத்திற்கு வரவழைத்திருக்கிறார். பின் கயல்விழியை காரில் ஏற்றி அவரை காரில் வைத்தே கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவர் அணிந்த ஏழு பவுன் தங்க நகைகளை பறித்துள்ளனர்.

நம்பவைத்து சீரழித்த மந்திரவாதி - கணவருடன் சேரத்துடித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Nellai Woman Case Skeleton Found 4 Arrested

இதனையடுத்து அவரது உடலை களக்காடு அருகே உள்ள 80 அடி கால்வாயில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அதில் கயல்விழியின் எலும்புக்கூடு பாகங்கள் மற்றும் அவர் அணிந்த உடை கண்டெடுக்கப்பட்டது.

மேலும் சிவசாமி, கொலைக்கு உறுதுணையாக இருந்த சிவனேஸ்வரி, மாயாண்டிராஜா, கண்ணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏழு பவுன் தங்க நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.