வாயில் மண்ணை போட்டு.. 80 வயது மூதாட்டிக்கு கொடூரம் - இளைஞர் சுட்டுப்பிடிப்பு
80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டிக்கு கொடூரம்
கடலூர், திராசு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(80). இவர் காலை மாலை வேலைகளில் புலவனூர் சாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்ட போது,
சாலையோரம் மதுபோதையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் மூதாட்டியை தரதரவென சவுக்கு தோப்பிற்குள் இழுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணை கொட்டிய அவர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
மேலும், மூதாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் நகைகளையும் அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வந்தனர்.
தகவலின் பேரில் வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை முந்திரி காட்டில் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் சக போலீஸாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலின் காலில் சுட்டார்.
இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அவரை பிடித்தனர். தற்போது 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Siragadikka Aasai: திருட்டுச் செயினால் மாட்டிக் கொண்ட விஜயா... ரோகினியை அடித்து நொறுக்கிய காட்சி Manithan
