வேறு சமூக பெண்ணுடன் காதல்; இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை - பரபரப்பு!

Attempted Murder Crime Tirunelveli
By Sumathi Jul 25, 2023 04:34 AM GMT
Report

காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம் 

நெல்லை, திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் முத்தையா(19). இவர் சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

வேறு சமூக பெண்ணுடன் காதல்; இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை - பரபரப்பு! | Nellai Thisayanvilai Youth Killed By Love Issue

கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்த இட்ட மொழி பகுதியை சேர்ந்த சுதா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. முத்தையா அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் சுதாவின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ஆணவக்கொலை

ஆனாலும், எதிர்ப்பையெல்லாம் தாண்டி முத்தையாவின் வீட்டிற்கு சென்று அவரை சுதா நேரில் சந்தித்துள்ளார். அதன்பின் மாலையில் முத்தையா தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை அவரது ஊரில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து தேடியதில், காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

உடனே தகவலறிந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் காதலால் ஏற்பட்ட தகராறில் கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.