கோவை நீதிமன்ற வளாகத்தில் கொலை, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

Coimbatore Crime
By Irumporai Feb 13, 2023 09:49 AM GMT
Report

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

கோவை நீதிமன்றத்தில் கொலை

கோவை கீரனத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இருவர் மீதும் கஞ்சா உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அங்கு நீதிமன்றம் பின்புறம் உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்துள்ளனர்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கொலை, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு | Court Complex 5 Special Forces Murder

தனிக்குழு விசாரணை

அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.