அஜித் சாரை மட்டும் பார்த்து விட்டு வரேன்... - நயன் -விக்கி திருமணத்தில் அடம் பிடித்த நரிக்குறவர் சிறுவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அஜித் பார்க்க வந்தேன்... அடம்பிடித்த சிறுவன்
இந்நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அஜித் குடும்பத்துடன் வருகை தந்தார். அப்போது, வாசலில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் நின்று பிரபலவங்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நரிகுறவர் கூட்டத்தில் ஒரு சிறுவன் அஜித் வந்ததைப் பார்த்து... அண்ணா.. அண்ணா... என்ன உள்ளே விடுங்க... நான் அஜித் சாரை மட்டும் பார்த்து விட்டு வருகிறேன் என்று நீண்ட நேரமாக அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் பார்க்க வந்தேன்!! ❤️🤩#AjithKumar || #AK61 || #Valimai
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) June 9, 2022
Video Of The Day 😍
From WikkiNayan Wedding (taken Outside of the resort) .. pic.twitter.com/KpfMdCEm3S