திருமண இடத்தை மாற்றியது ஏன்? விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்
வரும் ஜுன்-9ஆம் தேதி நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண இடத்தை மாற்றியது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த அழைப்பிதழில்,
அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ம் தேதி நடக்க உள்ளதாகவும், மேலும், அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இயக்குநரும், நடிகை நயன்தாராவின் வருங்கால கணவருமான விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நானும், நடிகை நயன்தாராவும் வருகிற ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்.
எங்கள் திருமணம் முதலில் திருப்பதியில்தான் செய்யலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், இங்கிருந்து அவ்வளவு பேரையும் கூட்டிக்கொண்டு போவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது.
அதேபோல் எங்கள் திருமணம் அங்கு நடைபெறுவதால் பலர் வருவதற்கும் சிரமம் ஏற்படும். ஆதலால் திருப்பதியில் திருமணம் செய்யவில்லை.
சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில்தான் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் முடித்துவிட்டு ஜூன் 11ம் தேதி உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தார்.