நயன் - விக்கி திருமணத்திற்கு இந்த 3 பிரபலங்களுக்கு மட்டுமே சென்ற அழைப்பிதழ்? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும்,இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்தவுடன் மங்களம் யானையிடம் வாழைப்பழம் கொடுத்து ஆசி பெற்றார்.
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த பத்திரிக்கையில், அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடக்க உள்ளதாகவும், மேலும், அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாகவும், தமிழ் சினிமாவைச் சேர்ந்த 3 முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும், நண்பருமான விஜய் சேதுபதிக்கும், நெருங்கிய தோழியான சமந்தாவுக்கும், டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் தானுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், நெருங்கிய நண்பரான அனிருத்திற்குகூட அழைப்பு விடுக்காதது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.