திருமணத்தில் ஏ.ஆர்.ரகுமானின் கையை தொட்டு வணங்கிய விக்னேஷ் - வைரலாகும் புகைப்படம்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
ஹனிமூன்
தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமணம் முடிந்து முதல் மாதம் நிறைவடையடுத்து, திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா-விக்னேஷ் திருமணத்திற்கு வருகை தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் கையைத் தொட்டு வணங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இதைப் பார்த்த நயன்தாரா பூரிப்பில் சிரிக்கிறார்.
இதோ அந்த புகைப்படம் -
More 😇 #Isaipuyal @arrahman #WikkiNayanWedding 🫶🏻 @arrameen pic.twitter.com/lBNsjDjiTE
— Nayanthara✨ (@NayantharaU) July 10, 2022