வாடகைத்தாய் கண்டுபிடிப்பு - துபாய் அரசிடம் உதவி நாடும் சுகாதாரத்துறை!
நயன்தாரா விவகாரத்தில் வாடகைத்தாய் மற்றும் மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடகைத் தாய்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அதன்பின் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவபணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஒரு வாரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், வாடகைத் தாயாக உதவிய பெண் யார் என்று தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்த அப்பெண் நயன்தாராவுக்கு உறவினர் என கூறப்படுகிறது. துபாயில் நயன்தாரா முதலீடு செய்திருக்கும் சில தொழில்களை அப்பெண் தான் கவனித்து வருகிறாராம்.
துபாய் அரசிடம் உதவி?
அந்த நெருக்கமான தொடர்பின் வாயிலாகவே வாடகைத்தாயாக சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நயன் - விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தது, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள்,
கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை, துபாய் அரசிடம் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக உதவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.