6 வருடத்திற்கு முன்னே திருமணம்: பக்கா பிளான் போட்ட ஜோடி - 4பேர் கொண்ட குழு விசாரணை

Nayanthara Tamil nadu Ma. Subramanian Vignesh Shivan
By Sumathi Oct 16, 2022 12:38 PM GMT
Report

நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

வாடகைத் தாய் 

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென தெரிவித்திருந்தார்.

6 வருடத்திற்கு முன்னே திருமணம்: பக்கா பிளான் போட்ட ஜோடி - 4பேர் கொண்ட குழு விசாரணை | Nayanthara Vigesh Shivan Surrogacy Issue

ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அதன்பின் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.

குழு விசாரணை 

இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை நிறைவில் விதிமீறல் உள்ளதா என்பது தெரிய வரும் என கூறியுள்ளார். வாடகைத் தாய் விவகாரத்தில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, விசாரணை நடத்தும் மருத்துவக் குழுவிடம், நேற்று ஆதாரங்களை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த அறிக்கையில் நயன் - விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தது, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.