தமிழக வீரர் நடராஜனுக்காக இந்தியா கேப்டன் ரஹானே செய்த மெய்சிலிர்க்கும் காரியம்

cricket australia series
By Jon Jan 19, 2021 06:01 PM GMT
Report

தமிழக வீரர் நடராஜனிடம் வெற்றிக் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் இந்தியா கேப்டன் ரஹானே. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வைத்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி 328 ரன்களை கில்,புஜாரா,பண்ட் ஆகியோரது உதவியுடன் இலக்கை எட்டி வரலாற்று வெற்றியைப் பெற்றது. மேலும் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது.

அதன் பிறகு வெற்றிக் கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி டி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.