நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் அனுமதி மறுப்பு: சோகத்தில் மக்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டியில் பாராட்டு விழா நடத்த உள்ளூர் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி விழாவுக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பாராட்டு விழாவுக்கான மேடை அகற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி, சிட்னியில் இருந்து இன்றுஅதிகாலை நாடு திரும்பியது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், நடராஜன், இன்று தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். சின்னப்பம்பட்டி திரும்பும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக நேற்று இருந்தே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சின்னப்பம்பட்டியில் நடராஜன் வீட்டு அருகே ஒரு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் .கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடக்கூடாது என்ற வகையில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் மேடையை அகற்ற கூறினார்கள்.
அதன் அடிப்படியில் அமைக்கப்பட்டுள்ள மேடை அகற்றப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அந்த பந்தலும் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

சொத்துக்களால் ஏற்படப்போகும் வில்லங்கம் : கடும் கலக்கத்தில் முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் IBC Tamil
