அமெரிக்கா வாழ்க்கை; ஆனால் திருநெல்வேலி மருமகள்..என்ன காரணம்? நெப்போலியன் பதில்!

Napoleon Viral Video Marriage Tirunelveli
By Swetha Jul 25, 2024 07:00 AM GMT
Report

தனது மகனுக்கு தமிழ்நாட்டு பெண்ணை மருமகளாக தேர்வு செய்தது குறித்து பேசி உள்ளார்.

 திருநெல்வேலி மருமகள்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி மிரட்டிய நெப்போலியன் பின்னர் ஹீரோவாகவும் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தனது மகனின் உடல்நிலை கருதி அரசியல், சினிமாவை இரண்டையும் விட்டு விட்டு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார்.

அமெரிக்கா வாழ்க்கை; ஆனால் திருநெல்வேலி மருமகள்..என்ன காரணம்? நெப்போலியன் பதில்! | Napoleon Says Why Chose Tirunelveli Girls For Son

அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் நெப்போலியன் இயற்கை விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார். நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.இதில் முத்த மகன் தனுஷ் ஓர் அரியவகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த நோய் பாதிப்பு இருந்த போதிலும் போராடி படித்து தனது அப்பாவின் தொழிலுக்கு உதவி வருகிறார். அவருக்கு தற்போது 25 வயதாகும் நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்காக திருநெல்வேலி மூலக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து உள்ளார்.

வீடியோ காலில் அமெரிக்காவில் மாப்பிள்ளை - திருநெல்வேலியில் பொண்ணு!! நெப்போலியன் மருமகள் இவரே

வீடியோ காலில் அமெரிக்காவில் மாப்பிள்ளை - திருநெல்வேலியில் பொண்ணு!! நெப்போலியன் மருமகள் இவரே

நெப்போலியன் பதில்

அண்மையில் இருவருக்கும் வீடியோ காலில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், நெப்போலியன் தனது மகனின் நிச்சயதார்த்த விழாவில் தமிழ்நாட்டு பெண்ணை ஏன் மருமகளாக தேர்வு செய்தேன் என்பது குறித்து பேசி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா வாழ்க்கை; ஆனால் திருநெல்வேலி மருமகள்..என்ன காரணம்? நெப்போலியன் பதில்! | Napoleon Says Why Chose Tirunelveli Girls For Son

அதில் பேசிய அவர், நான் கடல் கடந்து போனாலும், தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மறக்காதவன், என் மகன்களையும் தமிழ் கலாச்சாரத்தோடு தான் வளர்த்துள்ளேன். நான் எந்த தேசத்தில் இருந்தாலும், என் குடும்பத்தில் என் மருமகள் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எனக்கு காசு, பணம் எல்லாம் முக்கியம் கிடையாது. எனது மருமகள் எனது அடுத்த வாரிசு. அதனால் தான் தமிழ்நாட்டு பெண்ணை எனது மருமகளாக மாற்றி இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.