சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் - சாதனை படைத்த நமீபியா வீரர்!
சர்வதேச டி20 கிரிக்கெட் அதிவேக சதம் விளாசி நமீபியா நாட்டு கிரிக்கெட் வீரர் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் அசத்தியுள்ளார்.
அதிவேக சதம்
நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நேபாள நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நமீபியா-நேபாளம் இடையிலான முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட் செய்தது. இந்த அணியை சேர்ந்த வீரர் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் அதிவேக சதம் கடந்து சாதனை படைத்தார்.
நேபாளம் தோல்வி
தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை அவர் விளாசியிருந்தார்.இதன் மூலம் நேபாள வீரர் குஷால் மல்லாவின் 34 பந்துகள் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேலும், இந்த போட்டியில் நமீபியா 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
