சமந்தாவை பிரிந்தாலும் அதை மட்டும் செய்யவே மாட்டேன் - நாக சைதன்யா உருக்கம்!
மனைவியை பிரிந்த போதிலும் அந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன் என நாக சைதன்யா கூறியுள்ளார்.
விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சமூக வலைதளங்களில் நாக சைதன்யாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார் சமந்தா. ஆனால், சமந்தாவின் புகைப்படங்களை அப்படியே வைத்துள்ளார் அவரது முன்னாள் கணவர்.
மீண்டும்..?
இந்நிலையில், மந்தாவும், நாக சைதன்யாவும் தங்களின் திருமண தேதியை குறிக்கும் வகையில் கையில் மோர்ஸ் கோடு டாட்டூ போட்டுக் கொண்டார்கள். தற்போது மனைவியை பிரிந்து விட்டபோதிலும் டாட்டூவை நீக்கவில்லையா என கேளிவி எழுப்பியதற்கு, விவாகரத்துக்கு பிறகும் கூட அந்த மோர்ஸ் கோடு டாட்டூவை நீக்கும் எண்ணம் ஏற்படவில்லை.
அந்த டாட்டுவை நீக்க மாட்டேன் என்றார்.
மேலும், மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் அவதிப்படும் சமந்தாவை போன் செய்து நாக சைதன்யா நலம் விசாரித்ததாகவும், அதன்பின் அவருடன் சேர்ந்து வாழ சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.