ராமர் ஒரு தொன்மம், அதற்கு அறிவியல் ஆதாரங்களே கிடையாது - கொந்தளித்த வைரமுத்து

Government Of India Vairamuthu
By Sumathi Jun 12, 2025 04:35 AM GMT
Report

ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது ஏன் என வைரமுத்து வேள்வி எழுப்பியுள்ளார்.

கீழடி ஆய்வு

தமிழ்நாட்டின் கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

vairamuthu

இதனை மத்திய அமைச்சர் ஜேந்திர சிங் மறுத்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், மத்திய அமைச்சர் ஷெகாவத் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார். ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சருக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன்.

கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல. அமெரிக்காவில் புளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை. அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

வைரமுத்து நல்ல மனிதரே கிடையாது - சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த கங்கை அமரன்

வைரமுத்து நல்ல மனிதரே கிடையாது - சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த கங்கை அமரன்

வைரமுத்து காட்டம் 

சில தரவுகள் அறிவியலின்பாற் பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற் பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை. ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்?

keezhadi

தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது. தமிழ் இனத்தின் தொன்மையை இந்தியாவின் தொன்மையென்று கொண்டாடிக் கொள்வதிலும் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்ற பாரதியார் பாட்டு எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது. மேலும் பல தரவுகள் சொல்வதற்கு உள்ளன. விரிக்கின் பெருகுமென்று அஞ்சி விடுக்கிறோம். அங்கீகார அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.