விமான நிலையத்தில் புகைப்படம் - காயத்தில் இருந்து மீண்டாரா முஸ்தாஃபிசூர்? ஷாக்கான ரசிகர்கள்!

Chennai Super Kings IPL 2024
By Swetha Mar 20, 2024 12:49 PM GMT
Report

போட்டியில் காயமடைந்த முஸ்தாஃபிசூர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காயத்தில் முஸ்தாஃபிசூர்

நடப்பாண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

விமான நிலையத்தில் புகைப்படம் - காயத்தில் இருந்து மீண்டாரா முஸ்தாஃபிசூர்? ஷாக்கான ரசிகர்கள்! | Mustafizur Rahman Joined Chennai Super Kings

தொடர்ந்து, சீசனின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் வீரர்களான டெவென் கான்வே மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் காயமடைந்துள்ளனர். 

நீங்க single -ஆ இருக்கீங்களா? அப்போ தப்பிதவறி கூட இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க!

நீங்க single -ஆ இருக்கீங்களா? அப்போ தப்பிதவறி கூட இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க!

ஷாக்கான ரசிகர்கள்

இதனால், அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

விமான நிலையத்தில் புகைப்படம் - காயத்தில் இருந்து மீண்டாரா முஸ்தாஃபிசூர்? ஷாக்கான ரசிகர்கள்! | Mustafizur Rahman Joined Chennai Super Kings

அதே போல, வங்கதேச வீரரான முஸ்தாஃபிசூர் ரஹ்மான் சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த போட்டியில் பலத்த காயமடைந்தார். அவரை மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சிஎஸ்கே ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து அவரும் இந்த சீசனில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.

விமான நிலையத்தில் புகைப்படம் - காயத்தில் இருந்து மீண்டாரா முஸ்தாஃபிசூர்? ஷாக்கான ரசிகர்கள்! | Mustafizur Rahman Joined Chennai Super Kings

ஆனால், அவர் அண்மையில் சென்னை அணியுடன் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதன் மூலம் அவர் அணியில் இணைவது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.